Sunday, March 13, 2005

சென்ற பதிவு டுமீல்!!

நேற்று ஒரு பதிவைப் போட முயற்சித்துக்கொண்டிருந்தேன். பலமுறை முயன்றும் தண்ணிகாட்டியதால் பொறுமையிழந்து எழுந்து போய்விட்டேன்... இன்று காலை வந்து பார்த்தால், முந்தைய 'நெப்போலியன்' பதிவையும் புதிதாக இடமுயன்ற ஒரு பதிவையும் involuntary anastamosis செய்து ஒரு இரண்டுங்கெட்டான் hybrid பதிவு இருந்தது. அதைக் கத்திரித்து எறிந்தாயிற்று. பெரிய பதிவென்பதால் ப்ளாகர் மூச்சுத்திணறிவிட்டதென்று நினைக்கிறேன். ஒருவேளை அதை இடுவதில் கடவுளுக்கே இஷ்டமில்லையோ என்னமோ ;-)!! ப்ளாகர், வரவர, நழுவிக்கொண்டேயிருக்கும் கிழவனின் கோமணம் போல ஆகிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. மறுபடி முயன்று பார்க்கிறேன். சே!

1 comment:

சன்னாசி said...

வெற்றி!! வெற்றி! நழுவாத கோமணம் தான்! குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்! :-)