Monday, November 22, 2004

திண்ணை - அறிவியல் கதை

'திண்ணை' யில் வெளியான ஜெயமோகனின் அறிவியல் புனைகதை வரிசை 1: ஐந்தாவது மருந்து - குறித்து

//குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான்.//

இது முற்றிலும் உண்மையில்லையென்றாலும், எதுவும் நடக்கலாமென்ற அறிவியல் சூழ்நிலையால், இது பெரிய விஷயமில்லை, ஒரு இறுதியான முடிவாகவுமிருக்காது. மனிதனுக்கு HIV போலக் குரங்குகளுக்கும் SIV (Simian Immunodeficiency virus) உண்டு.

http://pin.primate.wisc.edu/research/biosafety/mmwr.html


இந்தக் கதை பிடித்ததா? இல்லை. கிட்டத்தட்ட ஒரு பேட்டி, வியாக்கியானம் போலக் கதை போய்விட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

//ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குன்னா அது நிரந்தரமான மருந்தாகத்தான் இருக்கமுடியும்//

?? அது என்ன, சாவா? அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது. பூமியைச் சீரழிக்கும் மனிதர்களே, ஆவியாகக் கரைந்துபோய்விடுங்கள் என்று சொல்வது நன்றாகத்தானிருக்கிறது - ஆனால், இடுப்பில் கட்டிய கயிறுக்கும் மறுநுனிக்கும் இடையில் எவ்வளவு தூரமிருக்கிறதென்று யூகிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் விஸ்தீரணமும் அதேயளவு முடிவற்றதாகவே இருக்கும். பூமி என்பதை ஒரு template ஆக நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோமென்பதே உண்மை. நாம் மட்டுமல்ல, பரிணாம வளர்ச்சியின் அடிப்படை விதியும் அதுதான். மற்றபடி நோபல் பரிசு, 'இப்போது மருந்தை வெளியிடுவது' இன்னபிறவெல்லாம்....ம்ஹூம்.

தினமணிகதிரில் 'பிரதிமை' என்று ஒரு கதை வந்தது. அதிலும் இறுதியில் ஒரே ஒரு கேள்வி இருக்கும். ஆனால், அந்தச் சாதாரணக் கதையை அக்கேள்வி வேறெங்கோ கொண்டுபோய் வைக்கும். ஜெயமோகன் தன் 'களைப்பை நீக்குவதற்காக எடுத்துக்கொண்ட பயிற்சி' இந்தக் கதை என்று நினைக்கிறேன். இனி நிஜக் கதைகளை நாம் எதிர்பார்க்கலாம்.

1 comment:

Anonymous said...

see the story nithya in
http://wichitatamil.blogspot.com